Friday, February 19, 2010

அரசு கல்லூரியில் தமிழ் கருத்தரங்கம்

சேலம்: சேலம் அரசு கலைக்கல்லூரியில் இண்டு நாள் தமிழ் கருத்தரங்கம் நேற்று துவங்கியது. சேலம் அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை சார்பில், சங்க இலக்கியங்களில் பன்முகப்பார்வை என்ற தலைப்பில் இரண்டு நாள் மாநில அளவிலான கருத்தரங்கம் நேற்று துவங்கியது. துவக்கவிழாவில் தமிழ்த்துறை தலைவர் மாது அனைவரையும் வரவேற்றார். அரசு கலைக்கல்லூரி முதல்வர் சீதாராமன் தலைமை வகித்தார்.

பெரியார் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர்கள் ராஜேந்திரன், பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுந்தரமூர்த்தி கலந்து கொண்டார். "சங்க இலக்கியங்களில் குடும்பம்' என்ற தலைப்பில் பெரியார் பல்கலை தமிழ்த்துறை தலைவர் மாதையன், "சங்க அகத்திணை பாடல்களில் புறம் சார் கூறுகள்' என்ற தலைப்பில் பேராசிரியர் சுதந்திரம், "திணைக்கோட்பாடுகளும், முரண்பாடுகளும்' என்ற தலைப்பில் மாநிலக்கல்லூரி இணை ஆசிரியர் உதயகுமார், "சங்க இலக்கியங்களில் சமயக்கோட்பாடுகள்' என்ற தலைப்பில் குணசேகரன் ஆகியோர் பேசினர். இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

-- தினமலர் --

No comments:

Post a Comment