சேலம்: சேலம் ஏ.வி.எஸ்., கல்லூரியில் சுயமுன்னேற்றத்துக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் நடந்தது. ஏ.வி.எஸ்., பொறியியற் கல்லூரியில் முதலாமாண்டு பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மாணவ, மாணவிகளுக்கு சுய முன்னேற்றத்துக்கான பயிற்சி முகாம் நடந்தது. அமெரிக்கா ஜே.சி.ஜ., பல்கலை சான்றிதழ் பெற்ற(ஹெலிக்ஸ் பயிற்சி நிறுவனம்) குமரகுரு, ஆனந்த், பிரின்ஸ் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு தகவல்களை பரிமாறி கொள்வது குறித்தும், தமது திறமைகளை படிப்படியாக உயர்த்து கொள்ளுதல் குறித்து விளக்கப்பட்டது. தவிர, திறனை வளர்த்து கொள்வதன் மூலமாக மற்றவர்களின் முரண்பட்ட எண்ணங்களை குறைத்து உறவை மேம்படுத்த முடியும் என்றும், இன்றைய நிலையில் குழுவாக இணைந்து செயல்பட்டு சாதனை படைத்துள்ள நிறுவனங்கள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏ.வி.எஸ்., பொறியியல் கல்லூரி தாளாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-- தினமலர் --
No comments:
Post a Comment