சேலம்: ""வங்கிகளில் கடனுதவி வழங்குவதில் அதிக காலதாமதம் செய்யப்படுகிறது என்பது தொடர்பான புகார் அதிகம் வருகின்றன,'' என, இந்தியன் வங்கி தலைமை கண்காணிப்பு பொதுமேலாளர் தாமோதர் காமத் சேலத்தில் தெரிவித்தார்.சேலம் இந்தியன் வங்கி வட்டார அலுவலகத்தில், கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழா நடந்தது. இந்தியன் வங்கி சேலம் வட்டார துணை பொதுமேலாளர் மகாதேவன் தலைமை வகித்தார். இந்தியன் வங்கி தலைமை கண்காணிப்பு பொது மேலாளர் தாமோதர் காமத், இந்தியன் வங்கி ஊழியர்களிடம் பேசுகையில், கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தின் முக்கியத்துவம், பணியில் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வது, பணிபுரியும் இடத்தில் தவறுகள் நேராமல் கவனிப்பது போன்றவை குறித்து விளக்கினார். பல்லவன் கிராம வங்கி தலைவர் ஜெயபால், இந்தியன் வங்கி உதவி பொது மேலாளர் வள்ளியப்பன், முன்னோடி வங்கி மேலாளர் நடராஜன், சேலம் வட்டாரத்தில் பணிபுரியும் இந்தியன் வங்கியின் அனைத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு வார விழா குறித்து இந்தியன் வங்கி தலைமை கண்காணிப்பு பொது மேலாளர் தாமோதர் காமத் கூறுகையில், ""பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளில் முறைகேடு, லஞ்சம், ஊழல் போன்றவை நடக்காமல் தடுக்க, ஆண்டுதோறும் நவம்பரில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரவிழா நடத்தப்படுகிறது. வங்கிகளில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க வெளிப்படையான நிர்வாகம், துரித சேவை மேற்கொள்ளப்படுகிறது. ""வங்கிகளில் கடனுதவிக்கு விண்ணப்பித்தால், குறிப்பிட்ட கால அவகாசத்தில் வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. கடன் விண்ணப்பம் மீதான நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது, கடன் மறுக்கப்பட்டால் எதனால் மறுக்கப்படுகிறது என்பது போன்ற தகவல்களை மக்கள் அறிந்து கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது. வங்கிகளில் கம்ப்யூட்டர் மற்றும் "ஆன்-லைன்' சேவைகள் அதிகமாக வழங்கப்படுகின்றன.
அதனால், "சைபர் க்ரைம்' குற்றங்கள் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ""வாடிக்கையாளர்களும் பண பரிவர்த்தனையில், உரிய கவனம், விழிப்புணர்வுடன் செயலாற்றினால், "சைபர் க்ரைம்' குற்றங்கள் தடுக்கப்படும். கடனுதவி வழங்குவதில் லஞ்சம் கேட்பது, இடைத்தரகர்களின் தலையீடு, கடன் வழங்குவதில் காலதாமதம் போன்ற புகார்கள் வருகின்றன. ஆனால், கடன் வழங்குவதில் காலதாமதம் செய்யப்படுகிறது என்ற புகார்களே மிக அதிகமாக வருகின்றன. கடன் வழங்குவதில் முறைகேடு, லஞ்சம் கேட்பது போன்ற புகார்கள் வந்தால், உடனடியாக விசாரித்து மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கிறோம்,'' என்றார்.
-From Dinamalar
No comments:
Post a Comment